முக்கியமான பாசுரம் இன்று. பகவானை தியானித்து, அனுதினமும் அவன் புகழ் பாடி, வழக்கமான ஆகாரம், அலங்காரம் தவிர்த்து நோன்பிருந்து பகவானோடு கூடியிருக்கும் பாவையர்கள், கண்ணனின் தரிசனத்திலும், பக்தியிலும் விஞ்சி., கண்ணனை வெற்றி கொண்ட பெருமிதத்தில் இரும்பூது அடையும் காட்சியை இப்பாசுரம் மூலம்…
pari
-
-
கண்ணன் அழகில் கட்டுண்ட பாவையர், இன்னும் அவன் மயக்கம் தீர்ந்தார்களில்லை. ‘நாராயணன்’ ‘உலகளந்த உத்தமன்’ ‘மாதவன்’ ‘மாயன்’ ‘வைகுந்தன்’ ‘பரமன்’ ‘தேவாதி தேவன்’ ‘கேசவன்’ ‘பூவைப் பூ வண்ணா’ ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனின் அளவிட முடியாத பெருமைகளைப் பேசினாலும், மேலும்…
-
கண்ணனுக்கு “பல்லாண்டு” “போற்றி” பாடி, அவன் அருகில் இருப்பதையே பாக்கியமாய் உணர்ந்து, கோபியர்கள் குதூகலமாய் இருக்கிறார்கள். கண்ணனும், இவ்வளவு குளிரில், அதிகாலை நீராடி, கூட்டமாய் வந்திருக்கிறீர்களே; பறை மட்டும் தந்தால் திருப்தியா? என்கிறான். கோபியர்கள், கண்ணா! உன்னிடமிருந்து பறை பெறுவது தான்…
-
வேண்டியாருக்கு வேண்டியதை வேண்டுமளவு அளிக்கும் கண்ணன், இதோ, ஆய்ச்சியர் வேண்டியபடி தன்னை அலங்கரித்து அவர்கள் விரும்பும் மன்னனாக ‘சீரிய சிங்காசனம்’ நோக்கி கம்பீரமாய் நடந்து வருகின்றான். அவனின் காயாம்பூ கருமேனி அழகையும், சிங்கம் போன்ற நடை அழகையும் கண்ட ஆய்ச்சியருக்கு எல்லாம்…
-
இன்றைய பாசுரத்தில் ஆய்ச்சியருக்கு உதவி செய்யும் பொருட்டு இறங்கி வந்து விட்டாரே! கருணைக்கடல் கண்ண பரமாத்மா அருளோடு துவக்குவோம் இந்நாளை. வாழ்த்துக்கள்! நன்பின்னை பிராட்டியை முன் நிறுத்தி கொண்டு, ஆயர்குல மகளிர் கண்ணனிடம், எங்களுக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை;…
-
கண்ணா! நீ தான் எங்களுக்கு எல்லாம்; எழுந்து வா, என்ற கோபியரின் உள்மனதை இன்னும் நன்றாய் அறிய வேண்டுமென்று, கண்ணன் பேசாதே கிடக்கிறான். கோபியர்கள் மீண்டும். “கண்ணா! இது வாமனனாகிய உன் பூமி. இதை உணர்ந்த அரசர்கள், இந்த நாடு தங்களுடையது…
-
நேற்றையப் பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை மீண்டும் புகழ்ந்து எழுப்பியதில், கோபியருக்கும் பிராட்டிக்கும் உடன்பாடு ஏற்பட்டு, சமாதானமாகி., நப்பின்னை எழுந்து வந்து, ‘என்னருமைப் பெண்களே! நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து கண்ணபிரானைத் துயில் எழுந்து வர வேண்டுவோம்,’…
-
நேற்றைய காட்சி இன்றைய பாசுரத்திலும் தொடர்கிறது. ஒற்றுமையாய் இருக்கும் தம்பதியரிடம், ஒருவரை மட்டும் பிரித்து பேசினால் மற்றவர் அதை ஆமோதிப்பாரா? நாமெல்லாம் இதை உணரும் வண்ணம் உள்ளது பகவான் பிராட்டியின் அன்பின் நெருக்கம். கண்ணனும், நப்பின்னையும் எழுந்து வரவில்லை, வார்த்தை சொல்லவில்லை…
-
மாயக்கண்ணன் அல்லவா? மாயங்கள் செய்வதில் அவனுக்கு நிகர் யார்? இன்றைய பாசுரம் அலாதி ருசியானது. கண்ணனும் நப்பின்னையும் நடத்தும் சுவாரஸ்யமான நாடகம். நேற்றைய பாசுரத்தில், மனைவியை முன்னிட்டுக் கணவனை எழுப்ப எண்ணிய ஆச்சியர், நப்பின்னைப் பிராட்டியை பலவாறாய் புகழ்ந்து பாடி எழுப்பினர்.…
-
“மாதங்களில் நான் மார்கழி” என்றானே கண்ணன். அவனோடு கூடியிருக்க ஆயர்பாடி பெண்கள் செய்யும் அத்தனை முயற்சிகளும் பளிங்கு போல் சுத்தமானவை. நமக்கு வாழ்க்கைப் பாடமாய் இருப்பவை. தனியே போனால் கண்ணன் வசப்பட மாட்டானோ? என்று அய்ச்சியர் கூட்டமாய் வந்தனர். பெற்றோரை, அண்ணன்…
