மகாமட ஜனங்களே!நல்லா கேட்டுக்கோங்ஙோ.. நான்ஒரே சூரியன் தான்.மெதுவாத்தான் காயுவேன்.புழுபுழுங்கப்பிடாது. அவன் பாட்டுக்கு..அந்தப்பய..வருணன் தான்,பெஞ்சிட்டு போயிடுவான்.நான்வந்து அம்புட்டையும்ஒத்தையிலேயேகாய வைக்கனுமின்னா…நாளாவும்.நை..நை,ங்ஙப் பிடாது. மழை பெஞ்சுவெள்ளம் வந்தாஅழுது ஒப்பாரி வைக்கியளே!அப்பமழையே வேண்டாமோ? நீங்கசொல்லுத அளவுக்குமட்டும் பெய்யனுமினா..குடிதண்ணீ,விவசாயத்தேவையெல்லாம்நீங்களே பாத்துகிடுவீங்களா? முட்டாள்களா..மழைவந்து …இருந்து …ஓடிப்போன….பாதையெல்லாம் மறிச்சிட்டியளே..வத்தாத குளத்தையெல்லாம்வானளாவ கட்டிடம்…
பரிமேலழகன்
-
-
பருவ மாற்றத்தால்பயந்து போனஅம்மாவும் பொண்ணும். மகளுக்கெப்படிஎல்லாவற்றையும்நானே சொல்வது..??..அம்மா. தாயிடம் எப்படிதயக்கம் நீக்கிஉண்மைகளை அறிவது,?..மகள். உடல் திறப்பினைஉணரும் நாள் முதலேமகள் பெண்ணாகிறாள். பெண்பெண்ணாகவலம் வரவாழ்வாங்கு வாழவரம் வழங்குகிறதுபூத்த நாள். காரணம்Estrogenஎன்னும் ஹார்மோன்சுரப்பின் ஆரம்பம். அன்று நாள் முதல்அங்கம் துலங்கி..துலக்கிவெட்கம் புனைந்துபட்டாம் பூச்சிகளாய்சுற்றிச் சுழல்வர்…
-
பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக…
-
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த “திருப்பாவை” யின் நோக்கம் யாதெனில், கோதை நாச்சியார், ஞானமும், இறைவன் மேல் வைராக்கியமும் மிகுந்து, தானே போய் பகவானை அடைந்து, “உனக்கு அடிமையாய் இருக்கும் இந்த ‘ஆத்மா’ இந்த உலகத்தில் உழன்று அலையாதபடி தனக்குத் தகுதியான…
-
இதுகாறும் நோன்புக்கு “பறை தர வேண்டும்; அது தான் யாம் வந்த காரியம்” என்றெல்லாம் சொல்லி வந்த கோபியர், இன்றைய பாசுரத்திலே தங்களின் அந்தரங்க ஆசையை, இஷ்ட நாயகனிடம் விருப்பத்தோடு வெளியிடுகிறார்கள். அது என்ன? சிற்றஞ் சிறு காலே வந்து, அதாவது…
-
எல்லாம் கூடி வருகிறது ஆய்ச்சியருக்கு. நோன்பை முடித்து, ஆடை ஆபரணங்கள் அணிந்து பகவானோடு உண்டு களிக்கும் உற்வசம், இதோ. நெருங்கி விட்டது. ஆனாலும் கண்ணன் இன்னும் சோதிக்கிறான். பெண்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் தருகிறேன்; இவைகளைப் பெறுவதற்கு நீங்கள் அனுஷ்டித்த வழிமுறைகளைக் கூறுங்கள்,…
-
முக்கியமான பாசுரம் இன்று. பகவானை தியானித்து, அனுதினமும் அவன் புகழ் பாடி, வழக்கமான ஆகாரம், அலங்காரம் தவிர்த்து நோன்பிருந்து பகவானோடு கூடியிருக்கும் பாவையர்கள், கண்ணனின் தரிசனத்திலும், பக்தியிலும் விஞ்சி., கண்ணனை வெற்றி கொண்ட பெருமிதத்தில் இரும்பூது அடையும் காட்சியை இப்பாசுரம் மூலம்…
-
கண்ணன் அழகில் கட்டுண்ட பாவையர், இன்னும் அவன் மயக்கம் தீர்ந்தார்களில்லை. ‘நாராயணன்’ ‘உலகளந்த உத்தமன்’ ‘மாதவன்’ ‘மாயன்’ ‘வைகுந்தன்’ ‘பரமன்’ ‘தேவாதி தேவன்’ ‘கேசவன்’ ‘பூவைப் பூ வண்ணா’ ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனின் அளவிட முடியாத பெருமைகளைப் பேசினாலும், மேலும்…
-
கண்ணனுக்கு “பல்லாண்டு” “போற்றி” பாடி, அவன் அருகில் இருப்பதையே பாக்கியமாய் உணர்ந்து, கோபியர்கள் குதூகலமாய் இருக்கிறார்கள். கண்ணனும், இவ்வளவு குளிரில், அதிகாலை நீராடி, கூட்டமாய் வந்திருக்கிறீர்களே; பறை மட்டும் தந்தால் திருப்தியா? என்கிறான். கோபியர்கள், கண்ணா! உன்னிடமிருந்து பறை பெறுவது தான்…
-
வேண்டியாருக்கு வேண்டியதை வேண்டுமளவு அளிக்கும் கண்ணன், இதோ, ஆய்ச்சியர் வேண்டியபடி தன்னை அலங்கரித்து அவர்கள் விரும்பும் மன்னனாக ‘சீரிய சிங்காசனம்’ நோக்கி கம்பீரமாய் நடந்து வருகின்றான். அவனின் காயாம்பூ கருமேனி அழகையும், சிங்கம் போன்ற நடை அழகையும் கண்ட ஆய்ச்சியருக்கு எல்லாம்…
