காலமேகாலங்காலமாய்யாவுமாயிருந்துயாவரையும்யாவற்றையும்தீர்மானித்து இயக்குகிறது. காலத்தின்கருவிகளேஇப்பிரகிருதியின்படைக்கப்பட்டஉயிர்களெல்லாம். காலம் வாழ்க.காலன் வாழ்க. பே.பரிமேலழகன்December 01, 2018
parimelazhagan
-
-
உன்னைப்பார்க்க பார்க்கமதி குறைந்து குறைந்துஉன்னுள் என்னைஉயிரோடு புதைக்கிறேனே.. பெண்ணே.!உதிர்த்து விட்டுவிடு.போதும்..போதும்..உன் தயவில் இப்போதைக்குநான் பிழைத்துப் போகிறேன். மீண்டும் மீண்டும்இழுத்து அணைத்து சொருகு..உனக்குள் என்னை.அநுபவித்து விட்டுப் போகிறேன். நான்..என்னை உணர்ந்துமூச்சுவிட இடைவெளி விட்டு விட்டுஎன் தேகத்தைஉன் பசலையில் பிசைந்துஉன் தேகமெங்கும் அப்பு. உடலெங்கும்காதல்…
-
எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் என்பதுமீனின்வாலைப் பிடித்திழுப்பதை போல. “தன் தூண்டல்”மீனின்தலையை பிடித்து அமுக்குவது போல.பிடிபடும் உறுதியும் வெற்றியும்“தனக்குத்தானே” எனில்நூறுசதம் வெற்றி நிச்சயம். பே.பரிமேலழகன்November 29, 2018
-
கடவுள் இருக்கிறார்எனநம்பி வாழும் பலருக்குஒருவேளை கடவுள் இல்லையோ..எனும்படிக்கும்., கடவுள் இல்லவேயில்லைஎனஉரக்கச் சொல்லி வாழும் சிலருக்குஒருவேளை கடவுள்இருக்கத்தான் செய்கிறாரோ..எனும்படிக்கும்., மாறுபடும் அநுபவங்கள்வாழ்க்கையின் வழிநெடுகஏற்படுவது என்ன விந்தையோ.! #புரியாதவாழ்க்கை. பே.பரிமேலழகன்November 18, 2018
-
உழைப்பும்பிழைப்பும்பிழைக்கவேதிணறுகிற வெள்ளம். இம்மாந்தரின்வாழ்க்கை பற்றியஅசாத்திய நம்பிக்கைவியப்பைத் தருகிறது. தன்னுடைய அரைவேட்டியேதண்ணிக்குள்ளேஉருவிகிட்டு நழுவும் நெலையிலும்..பத்திரமாஅக்கரை ஏறிநாளைக்குள் கீழவீட்டுஅய்யம்மாளின்பாசிப்பயறு ஜம்பரை தச்சுத்தரனும்..என்றெண்ணி சிரிக்கிறாரோ.! ஏழைகளின் தைரியமேஅன்றாட வாழ்க்கை தரும்அவர்களின் அநுபவங்கள் தான்.சோகம் சுகம் ரெண்டுமே ஒன்று தான். சோறு முதல்சொப்பனம் வரைஎல்லாமே கண்ட பிறகே…
-
எப்போதைய நான்..”நான்”. நான் பார்த்த வேலையிலிருந்து ஓய்வுபெற்று ஐந்து வருடங்களாகிறது. ஏறக்குறைய 37 வருட வாழ்க்கை அது. இப்போது அந்த வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன். வேலைபார்த்த கம்பெனியின் பேரைச்சொல்லி என்னை அடையாளப் படுத்தியதையும் மறக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் இப்போதுள்ள “நான்”..அப்போதிருந்த “நான்”…
-
யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்பசியைமறக்க கேக்கவில்லை. தத்துவங்களும்தர்க்கங்களும்வாய்கிழியபேச மட்டுமே. பசியை வெல்வதுஉணவு மட்டுந்தான். சரி சரி.இனிதனிமை வேண்டாம்.ஏகாந்தம் தப்பு.மோனம் மோசம். சோறு கண்ட இடம் சொர்க்கம்.நிஜத்தில்இது தானே நம் நிஜவாழ்க்கை..!!! பே.பரிமேலழகன்June…
-
இந்தஇதமான மயிற்பீலியின்தடவலுக்காகண்மூடி கிறங்குகிறேன்..? ஒருபோதும் இல்லை. என்தொண்டைக்குழிக்குள்திண்டாடுது உன் தீஞ்சுவை முத்தங்கள். இழுத்து அமுக்கிகடித்து உறிஞ்சி கன்னம் விட்டு இறங்கிஅழுத்தமாய்கழுத்தைக் கடித்துக் குதப்புவாயே..சில பல நிமிடங்கள்..?? அந்தருசி வேண்டுமெனக்கு இப்போது..! அங்கம் முழுக்க கூசிஎன் வசத்தையிழந்து உன்னிடம் என்னைமுழுசாய் திறக்கும் முன்…
-
காந்தச்சுடராய்கருவிளை கண்கள்..கட்டிப் போடுதேஅவளின் அழகை. கட்டியவனைபொட்டிட்டுகாதலோடுகாத்திருக்கின்றன. காதல் பார்வைஎன்றாலும்அது அவளின்அவருக்கானது. கற்புடை மாதரின்கண்ணசைவில்கசிந்து உருகும்காளையர் மகிழ்சி. பே.பரிமேலழகன்May 08, 2018
-
உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் மலர்ச்சியும்உயர்த்தி வைத்த கைளும்உரிமையை கூட்டிச் சொல்லும்உவப்பான சமிக்ஞைகள்.உடனழைத்து உறவைப் போற்றும் நிரந்தர மகிழ்ச்சிகள். எனக்குஎனக்கானஎல்லா உறவுகளும் வேண்டும். என்னைத் தள்ளாத..எள்ளி நகைக்காத…
