எல்லா மேய்ப்பர்களும்ஏசுவாகி விடுவதில்லை.எல்லா சித்தாள்கட்கும்மச்சுவீடு சொந்தமில்லை. வாழ்க்கை பூராவுமேஇல்லாத ஒன்றுக்குஏங்கியே..இருப்பதை உணர்ந்தறியாநரகல் வாழ்க்கைமனிதர்கள் நாம். நழுவ விட்டு விட்டுநரகத்துழல்வதும்நம் வாடிக்கை. #குழப்பவாதிகள். பே.பரிமேலழகன்November 30, 2018
வாழ்வியல்
-
-
எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் என்பதுமீனின்வாலைப் பிடித்திழுப்பதை போல. “தன் தூண்டல்”மீனின்தலையை பிடித்து அமுக்குவது போல.பிடிபடும் உறுதியும் வெற்றியும்“தனக்குத்தானே” எனில்நூறுசதம் வெற்றி நிச்சயம். பே.பரிமேலழகன்November 29, 2018
-
யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்பசியைமறக்க கேக்கவில்லை. தத்துவங்களும்தர்க்கங்களும்வாய்கிழியபேச மட்டுமே. பசியை வெல்வதுஉணவு மட்டுந்தான். சரி சரி.இனிதனிமை வேண்டாம்.ஏகாந்தம் தப்பு.மோனம் மோசம். சோறு கண்ட இடம் சொர்க்கம்.நிஜத்தில்இது தானே நம் நிஜவாழ்க்கை..!!! பே.பரிமேலழகன்June…
-
உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் மலர்ச்சியும்உயர்த்தி வைத்த கைளும்உரிமையை கூட்டிச் சொல்லும்உவப்பான சமிக்ஞைகள்.உடனழைத்து உறவைப் போற்றும் நிரந்தர மகிழ்ச்சிகள். எனக்குஎனக்கானஎல்லா உறவுகளும் வேண்டும். என்னைத் தள்ளாத..எள்ளி நகைக்காத…
-
பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் தெரிந்து புள்ளியாய் மறைந்துசாதனை படைக்கும் விஞ்ஞானச் சாகசம். வேதங்கள் விளம்பிய சூத்திரங்களின்சாத்தியம் காணும் ஆவலில் பிறந்த.. மின்னிடும் இன்னுமோர்…
-
நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் போனாலும்உங்காத்தா நான் உருட்டித் தந்த சோத்துருண்டைஉள் நெனைவா உருண்டு நம்ம உறவைச் சொல்லும்.ஒங்களுக்கு நான் தாய் என்ற ஒத்த…
-
எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் இயல்பாகவும்அந்த மாற்றங்கள்காலச்சாவியால் திறக்கப்படுகின்றன. நாமும் தான்நம் கண் முன்னேஎத்தனை மாற்றங்களைப் பார்த்து விட்டோம்.இனியும்எத்தனை மாற்றங்களை பார்க்கப் போகிறோமோ..?சரியாய் தெரியாது. ஆகவேஇன்றையை சூழ்நிலை கண்டுஇன்றைய…
-
மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் சிந்தனைக்கும்உறைக்க மாட்டேங்குது? பிறரைப் பார்த்து,அவர்களோடுஒப்பிட்டு,பொறாமைபட்டுஇருக்கிறதை வுட்டுட்டுபறக்கிறதுக்கு ஆசைப்பட்டுபலதையும் சேர்க்க ஆசைப்பட்டு,பஞ்சு போலகாத்துலபறந்த மனசைபாறையைப் போலஇறுக வச்சுட்டோமோ? ஆசையை குறைப்போம்;தேவையைக் குறைப்போம். போதும் என்றிருப்போம்,நியாயமாய் உதவுவோம். இருக்கிறதுக்குள்ளேயேவாழ்க்கையை…
-
இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் வாழ்ந்த வாழ்க்கையில..ஒரு இம்மி கூட நீங்க இன்னும் வாழலே…நீங்க வாழுறது வாழ்க்கையுமில்லலே..ன்னு. பே.பரிமேலழகன்January 06, 2016
-
“நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்இமைப்பொழுதும் சோராதுபோற்றி காப்போம். நேரத்திற்குள் செய்வோம்.நேர்மையாகச் செய்வோம். பே.பரிமேலழகன்January 05, 2016
- 1
- 2
