மகாவிஷ்ணு ஆயர்பாடியிலே கண்ணனாக அவதரித்த காலத்தில், ஆயர்பாடியிலுள்ள இடைக்குலப் பெண்கள் கண்ணனுடன் உயிராய் இருந்து வந்தனர். இதைக்கண்டு வெகுண்ட ஆயர்கள் தம் வீட்டுப் பெண்களுக்கும் கண்ணனுக்கும் தொடர்பு உண்டாகா வண்ணம்., இடைக்குலப் பெண்களை நிலவறைகளில் தள்ளி பூட்டி காவல் வைத்தனர். கோபியரும்…
thiruppavai
-
-
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த “திருப்பாவை” யின் நோக்கம் யாதெனில், கோதை நாச்சியார், ஞானமும், இறைவன் மேல் வைராக்கியமும் மிகுந்து, தானே போய் பகவானை அடைந்து, “உனக்கு அடிமையாய் இருக்கும் இந்த ‘ஆத்மா’ இந்த உலகத்தில் உழன்று அலையாதபடி தனக்குத் தகுதியான…
-
இதுகாறும் நோன்புக்கு “பறை தர வேண்டும்; அது தான் யாம் வந்த காரியம்” என்றெல்லாம் சொல்லி வந்த கோபியர், இன்றைய பாசுரத்திலே தங்களின் அந்தரங்க ஆசையை, இஷ்ட நாயகனிடம் விருப்பத்தோடு வெளியிடுகிறார்கள். அது என்ன? சிற்றஞ் சிறு காலே வந்து, அதாவது…
-
எல்லாம் கூடி வருகிறது ஆய்ச்சியருக்கு. நோன்பை முடித்து, ஆடை ஆபரணங்கள் அணிந்து பகவானோடு உண்டு களிக்கும் உற்வசம், இதோ. நெருங்கி விட்டது. ஆனாலும் கண்ணன் இன்னும் சோதிக்கிறான். பெண்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் தருகிறேன்; இவைகளைப் பெறுவதற்கு நீங்கள் அனுஷ்டித்த வழிமுறைகளைக் கூறுங்கள்,…
-
முக்கியமான பாசுரம் இன்று. பகவானை தியானித்து, அனுதினமும் அவன் புகழ் பாடி, வழக்கமான ஆகாரம், அலங்காரம் தவிர்த்து நோன்பிருந்து பகவானோடு கூடியிருக்கும் பாவையர்கள், கண்ணனின் தரிசனத்திலும், பக்தியிலும் விஞ்சி., கண்ணனை வெற்றி கொண்ட பெருமிதத்தில் இரும்பூது அடையும் காட்சியை இப்பாசுரம் மூலம்…
-
கண்ணன் அழகில் கட்டுண்ட பாவையர், இன்னும் அவன் மயக்கம் தீர்ந்தார்களில்லை. ‘நாராயணன்’ ‘உலகளந்த உத்தமன்’ ‘மாதவன்’ ‘மாயன்’ ‘வைகுந்தன்’ ‘பரமன்’ ‘தேவாதி தேவன்’ ‘கேசவன்’ ‘பூவைப் பூ வண்ணா’ ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனின் அளவிட முடியாத பெருமைகளைப் பேசினாலும், மேலும்…
-
கண்ணனுக்கு “பல்லாண்டு” “போற்றி” பாடி, அவன் அருகில் இருப்பதையே பாக்கியமாய் உணர்ந்து, கோபியர்கள் குதூகலமாய் இருக்கிறார்கள். கண்ணனும், இவ்வளவு குளிரில், அதிகாலை நீராடி, கூட்டமாய் வந்திருக்கிறீர்களே; பறை மட்டும் தந்தால் திருப்தியா? என்கிறான். கோபியர்கள், கண்ணா! உன்னிடமிருந்து பறை பெறுவது தான்…
-
வேண்டியாருக்கு வேண்டியதை வேண்டுமளவு அளிக்கும் கண்ணன், இதோ, ஆய்ச்சியர் வேண்டியபடி தன்னை அலங்கரித்து அவர்கள் விரும்பும் மன்னனாக ‘சீரிய சிங்காசனம்’ நோக்கி கம்பீரமாய் நடந்து வருகின்றான். அவனின் காயாம்பூ கருமேனி அழகையும், சிங்கம் போன்ற நடை அழகையும் கண்ட ஆய்ச்சியருக்கு எல்லாம்…
-
இன்றைய பாசுரத்தில் ஆய்ச்சியருக்கு உதவி செய்யும் பொருட்டு இறங்கி வந்து விட்டாரே! கருணைக்கடல் கண்ண பரமாத்மா அருளோடு துவக்குவோம் இந்நாளை. வாழ்த்துக்கள்! நன்பின்னை பிராட்டியை முன் நிறுத்தி கொண்டு, ஆயர்குல மகளிர் கண்ணனிடம், எங்களுக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை;…
-
கண்ணா! நீ தான் எங்களுக்கு எல்லாம்; எழுந்து வா, என்ற கோபியரின் உள்மனதை இன்னும் நன்றாய் அறிய வேண்டுமென்று, கண்ணன் பேசாதே கிடக்கிறான். கோபியர்கள் மீண்டும். “கண்ணா! இது வாமனனாகிய உன் பூமி. இதை உணர்ந்த அரசர்கள், இந்த நாடு தங்களுடையது…
