அனாதி காலந்தொட்டு பெண்கள் அலாதியானவர்கள். எவருக்கும் எளிதில் வசப்பட்டு விட மாட்டார்கள். அதிலும் அழகும், செல்வமும், மற்றெல்லா வகையிலும் மேன்மை பெற்றவர்களானால், அவர்களிடம் காரியம் சாதிக்க உருட்டல், மிரட்டல் உதவாது. “தாஜா” பண்ணித்தான் முயற்சி செய்யனும். அப்படிப்பட்ட ஒருத்தியை எழுப்புகிறது இன்றைய…
திருப்பாவை
-
-
இன்று கண்ணனின் திருமாளிகைக்குப் பக்கத்து மாளிகையில் உள்ள ஒருத்தியை துயில் எழுப்பும் காட்சி. பக்கத்து வீட்டுக்காரி என்பதினால் கண்ணனின் சுகாநுபவத்தை சற்று கூடுதலாக, சொர்க்கத்தில் மூழ்கி அநுபவிக்கும் பொருட்டு இன்னும் ஆழ்ந்த நித்திரை கொண்டிருக்கிறாள். கதவை உள்ளே தாழிட்டுத் தூங்கினாலும், கண்ணன்…
-
கண்ணன் வருகிறபோது வரட்டும். அதற்காக தூக்கத்தை விட முடியாது என பிடிவாதமாய் படுத்துறங்கும் ஒருத்தியை, மச்சினி முறையோடு அழைத்து அதட்டியும் கிண்டல் செய்தும் அவள் அம்மாவையும் துணைக்கழைத்துத் துயில் எழுப்பும் பாசுரம். தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்தூபங்கமழத் துயிலணை மேல் கண்…
-
பறவைகள் சத்தம், சங்க நாதம், மந்திர உச்சாடனை என்று பலவாறாக பொழுது விடிந்ததை உணர்த்தி பல கோபியரை எழுப்பியாகி விட்டது. இன்று இவர்கள் கூட்டத்திலேயே முக்கியமான பக்தையை எழுப்புகிறார்கள். அவள் தான் “கோதுகலமுடைய பாவாய்”. ‘கௌதூஹலம்’ என்னும் வடமொழிச் சொல்லின் விகாரம்.,…
-
பள்ளியெழுச்சி தொடர்கிறது. ஆயர்குலப் பெண்கள் மாளிகைதோறும் சென்று தோழியரை எழுப்பித் திரட்டிக் கொண்டு வரும் வேளையில், ஆயர்குலக் கொழுந்து, ஸ்ரீமந் நாராயணன்., கண்ணனையே எண்ணி மெய்மறந்து கிடப்பதைப் போல் தூங்குபவளை விடியலின் அடையாளம் சொல்லி எழுப்பும் காட்சி இன்றைய பாசுரம். எல்லோரும்…
-
நேற்றையப் பாசுரம் வரை., நோன்பு முறைகளைப் பற்றி ஆயர்பாடி பெண்கள் விரிவாகப் பேசியதைக் கண்டோம். இன்று முதல் பத்து நாட்களுக்கு., திருப்பாவையில் “பள்ளிஎழுச்சிப் பாசுரங்கள்” தான். சீர் மல்கும் ஆயர்பாடி அல்லவா! செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடி இடைக்குல மகளிர் பேசி…
-
மகாவிஷ்ணுவின் அவதாரம், கருமைநிறக் கண்ணன் மேல் இவ்வளவு பக்தி செலுத்தி நோன்பு நோற்கின்றோமே, நாமெல்லாம் சாதாரண ஆயர்குல மக்களாயிற்றே, தெரிந்தும் தெரியாமலும் பல பிழைகளை ஏற்கனவே செய்துள்ளோமே; நமக்கு அந்த கண்ணபிரான் கடைக்கண் பார்வை மூலம் அருள் கிட்டுமா? நாம் அவ்வாறு…
-
ஆயர்பாடி பெண்கள் நோன்பு நோற்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களே, நாமும் இவர்கள் நோன்புக்கு ஆதரவாக உதவ வேண்டும் என்று மழை தேவதை “பர்ஜந்யன்” அதாவது மேகம் அருகே வந்து கோபியரின் கோரிக்கைக்கு காத்து நிற்கிறான். பெருமாளின் பக்தைகள் வேறு கடவுளை வணங்க…
-
“உத்தமன் ” பேர் பாடி., நோன்பிருந்து நீராடினால்., நாடு செழிக்கும்; நல்ல மழை பெய்யும், நீர்வளம், நெல்வளம், பால்வளம் பெற்று எல்லாச் செல்வங்களும் ஆயர்பாடி தேடி வரும் என்கிறார், ஆண்டாள் நாச்சியார். திருமாலை “உத்தமன்” என்று பக்தி செய்கிறார் ஆண்டாள். யார்…
-
பாவை விரதம் மேற்கொள்ள, கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களைக் கூறுதல். வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்பையத் துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும்…
