உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு. மயிலிறகுச் சுகமாய்உனைத் தடவிமகிழ்தலும் கூடுதல் அழகே..! பே.பரிமேலழகன்May 14, 2016
Tag:
அழகு
-
-
முன்னும் பின்னும்அழகோவியங்கள். அக்னிக் குழம்பாய்மேலெழும் சூரியன். ஆடல் அணங்காய்நடனமிடும் நங்கை. இறைவன் படைப்பினில்இரண்டுமே பரவசம். உதயமும் நடனமும்உள்ளொளிப் பெருக்கி சிவப்பும் உவப்புமாய்சீர் பெருக்கிப் படரும். ஆனந்த அதிகாலையில்பரமானந்த காட்சிகள்..ஆஹா.! இருளும் நிசப்தமும்விலகும் விசித்திரம். ஒளியும் சதங்கையும்ஒளிரும் நாதமணியோசை. மகிழ்ச்சியும் நிம்மதியும்மனமகிழ் சூத்திரம்.…
