எல்லையென எதுவுமில்லை

by Parimelazhagan P
124 views
பாட்டையா

இயற்கையோடு இணைந்து வாழ
எல்லையென எதுவுமில்லை .

இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.
இடைச் செருகலான கோவணந்தான் போலி.

ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு..

போங்கலே..பைத்தியார பயலுவொளா…
நான் வாழ்ந்த வாழ்க்கையில..
ஒரு இம்மி கூட நீங்க இன்னும் வாழலே…
நீங்க வாழுறது வாழ்க்கையுமில்லலே..ன்னு.

பே.பரிமேலழகன்
January 06, 2016

You may also like